மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

அரிசிப் பூரி

புழுங்கல் அரிசியை சுத்தம் செய்து, சுமார் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.

News image
Updated On :21 ஜூன் 2026, 12:00 am IST

தேவையான பொருள்கள்:

புழுங்கல் அரிசி - 1 கிலோ

மிளகுத்தூள் - 10 கிராம்

தேங்காய்த் துருவல் - 2 கிண்ணம்

உப்பு, எண்ணெய் - தேவைக்கு

செய்முறை:

புழுங்கல் அரிசியை சுத்தம் செய்து, சுமார் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். அரிசி நன்றாக ஊறியதும், அத்துடன் தேங்காய்த் துருவல், தேவையான அளவு உப்பு சேர்த்து நைசாக சற்று கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் மிளகுத்தூள் சேர்த்து பூரி மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும். ஒரு மணிநேரம் கழித்து மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி, வாழையிலையில் எண்ணெய் தடவி, மாவை பூரி போலத் தட்டி காய்ந்த எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும். இது சாதாரண பூரியைவிட வாசமாகவும் ருசியாகவும் இருக்கும்.

ஏ. மூர்த்தி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.