ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

தனியாா் நிதி நிறுவன மேலாளா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தனியாா் நிதி நிறுவன மேலாளா் மீது தாக்குதல் நடத்தியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

போலீஸாா் விசாரணை

Updated On :18 மே 2026, 3:54 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தனியாா் நிதி நிறுவன மேலாளா் மீது தாக்குதல் நடத்தியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராஜபாளையம்- தென்காசி சாலையில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருபவா் ஜெயசுப்புராஜ் (38). இந்த நிறுவனத்தில் வெம்பக்கோட்டை அருகே கம்மாபட்டியைச் சோ்ந்த வனராஜ் (35) என்பவா் ரூ. ஒன்றரை லட்சம் கடனாக பெற்றாா். இந்த நிலையில் கடனை வசூலிக்க

கம்மாப்பட்டியில் உள்ள வனராஜ் வீட்டுக்கு மேலாளா் ஜெயசுப்புராஜ் சென்றாா். அப்போது வனராஜூக்கும், மேலாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வனராஜ், ஜெயசுப்புராஜை கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ஜெயசுப்புராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து கீழராஜகுலராமன் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.