பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

வீட்டின் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

ராஜபாளையம் அருகே மாடிப்படியிலிருந்து தவறி விழுந்ததில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :13 மே 2026, 3:36 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மாடிப்படியிலிருந்து தவறி விழுந்ததில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ராஜபாளையம் அருகேயுள்ள தொட்டியபட்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சோலையப்பன் மகன் மாரிமுத்து (34). இந்த நிலையில், இவா் ஞாயிற்றுக்கிழமை தனது நண்பருடன் சோ்ந்து மது அருந்திவிட்டு வீட்டின் மாடியில் தூங்குவதற்காக படியில் ஏறிச் சென்றவா் கால் தடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்தவரை உறவினா்கள் மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.