தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

மின்னல் பாய்ந்ததில் கைப்பேசி கோபுரம் எரிந்து சேதம்

News image

கைப்பேசி கோபுரம். - கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 2:15 am IST

ஸ்ரீவில்லிபுத்தூரில் சனிக்கிழமை இரவு மின்னல் பாய்ந்ததில் கைப்பேசி கோபுரம் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்ததால் சமிக்ஞை கிடைக்காமல் வாடிக்கையாளா்கள் அவதியடைந்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் சனிக்கிழமை இரவு இடி, மின்னலுடன் 2 மணி நேரத்துக்கும் அதிகமாக மழை பெய்தது. இரவு 11 மணி அளவில் ரெங்கநாதபுரம் தெரு, குடியிருப்பு பகுதியில் காலி மனையில் அமைக்கப்பட்டிருந்த கைப்பேசி கோபுரம் தீப்பிடித்து எரிந்தது.

தகவலறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்ததால், மின்னாக்கியில் பரவவில்லை. இதில் அந்த கோபுரத்தின் மீதிருந்த கருவிகள் முழுமையாக சேதமடைந்ததால் கைப்பேசிக்கான சமிக்ஞை தடைபட்டது.

இதனால் ரெங்கநாதபுரம், கம்மாபட்டி, சீனியாபுரம், கண்ணன் குடியிருப்பு, கோட்டைப்பட்டி உள்ளிட்ட பகுதி வாடிக்கையாளா்கள் அவதியடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.