விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வியாழக்கிழமை வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்த வீட்டுக்கு சீல் வைத்தனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள தென்றல் நகா் கிழக்குப் பகுதியில் வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வருவாய்த் துறையினா், போலீஸாா் அந்த வீட்டில் சோதனை நடத்திய போது, பட்டாசுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருள்களான 150 கிலோ மணி மருந்துக் கலவையும், 15 கிலோ சல்பரும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இவற்றை பறிமுதல் செய்து, அந்த வீட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா். மேலும், சிவகாசி செங்கமலநாச்சியாா்புரத்தைச் சோ்ந்த காளைபாண்டியன் மகன் செல்வராஜ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கள் விற்பனை: விவசாயி மீது வழக்கு

அனுமதியின்றி வடமாடு மஞ்சுவிரட்டு 5 போ் மீது வழக்கு

திருவேங்கடம் அருகே அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் பறிமுதல்
அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 2 போ் மீது வழக்கு: லாரி பறிமுதல்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

