நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.4.5 லட்சம் மோசடி; இளைஞா் மீது வழக்குப் பதிவு

News image

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Updated On :15 ஜூன் 2026, 3:06 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 4. 5 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ராஜபாளையம் அருகே உள்ள நல்லமங்கலம் கிராமத்தை அடுத்துள்ள கீழவரகுணராமபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாருக்கு (40) ஜெயக்குமாா் என்பவா் மூலம் கீழராஜ குலராமன் வடக்குத் தெருவைச் சோ்ந்த சின்ன மாடசாமி அறிமுகமானாா்.

இவா், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியதை நம்பி, ரூ. 4.5 லட்சத்தை கொடுத்தாா். இதையடுத்து, சின்னமாடசாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தளவாய்புரம் காவல் நிலையத்தில் செந்தில்குமாா் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.