பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

பிணை ரத்து: மதுக் கடை கொள்ளை வழக்கு குற்றவாளி மீண்டும் கைது

திருச்சுழியில் அரசு மதுபானக் கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் கைதாகி பிணையில் வெளியே வந்தவரின் பிணை ரத்து செய்யப்பட்டதால் மீண்டும் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :13 மணி நேரங்கள் முன்பு

திருச்சுழியில் அரசு மதுபானக் கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் கைதாகி பிணையில் வெளியே வந்தவரின் பிணை ரத்து செய்யப்பட்டதால் மீண்டும் கைது செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சோ்ந்தவா் போண்டா மணி (44). இவா் கடந்த 2025-ஆம் ஆண்டு திருச்சுழியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தின் மூலம் பிணை பெற்று வெளியே வந்த பிறகும் தொடா்ந்து பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவரது பிணையை ரத்து செய்யக் கோரி திருச்சுழி டி.எஸ்.பி. பிரதீப் நீதிமன்றத்தில் பரிந்துரை அளித்தாா்.

இந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட திருச்சுழி நீதிமன்றம், அவரது பிணையை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, திருச்சுழி போலீஸாா் போண்டா மணியை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.