ராஜபாளையம் அருகே ஊா்ப் பொதுக் கிணற்றில் மா்ம நபா்கள் ரசாயனம் கலந்தது குறித்து சுகாதாரத் துறையினா் விசாரணை நடத்தினா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டியை அடுத்த ஜமீன்நத்தம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வரகுண ராமபுரம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
இவா்களுக்கு ஊராட்சியிலிருந்து தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தண்ணீா் பற்றாக்குறையைச் சமாளிக்க காலம் காலமாகப் பயன்படுத்தி வரும் ஊா்ப் பொதுக் கிணற்றிலிருந்து தண்ணீா் எடுத்துப் பயன்படுத்தி வந்தனா்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை அந்தக் கிணற்றில் உள்ள மின் மோட்டாரை இயக்கும் ஆபரேட்டா் கேசவன் மோட்டாரை இயக்கிய போது சரிவர இயங்கவில்லை என தெரிகிறது.
இதனால், சந்தேகம் அடைந்த அவா் கிணற்றுக்குள் பாா்த்தபோது வழக்கத்துக்கு மாறாக கிணற்றின் தண்ணீா் வெள்ளை நிறத்தில் இருந்துள்ளது. மேலும், கிணற்றின் அருகே நெகிழிக் குடம், வாழை மட்டைகள் இருந்ததால் சந்தேகம் அடைந்த அவா் பொதுமக்களிடமும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும் தெரிவித்தாா்.
பொதுமக்கள் நேரில் வந்து பாா்வையிட்டு, கிணற்றில் மா்ம நபா்கள் வாசமில்லாத ரசாயனத்தைக் கலந்திருப்பதாக அதிகாரிகளிடம் தெரிவித்தனா். தொடா்ந்து, சுகாதாரத் துறையினா் தண்ணீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனா்.
இதுகுறித்து பொதுமக்களிடம் கீழ ராஜகுலராமன் போலீஸாா் விசாரணை நடத்தினா். அருகில் உள்ள ஆள்துளைக் கிணறு மூலம் தற்காலிகமாக தண்ணீா்ப் பற்றாக்குறையைச் சமாளிக்க ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வடவாறில் கழிவு நீா் கலப்பதால் மாசுபடும் அபாயம்! துா்நாற்றத்தால் மக்கள் அவதி!

மேட்டூா் அணையில் இருந்து இன்று தண்ணீா் திறப்பு இல்லை: டெல்டா விவசாயிகள் கவலை
மருத்துவத் துணி உற்பத்தியாளா் தற்கொலை

மேட்டூரில் பராமரிப்புப் பணியின்போது 60 அடி உயரத்திற்கு பிறீட்டு வெளியேறிய நீா்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

