விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மாட்டு வண்டியை ஓட்டி வாக்கு சேகரிப்பு!

மாட்டு வண்டியை ஓட்டி வாக்கு சேகரித்த சிவகாசி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.டி. ராஜேந்திரபாலாஜி....

News image

சிவகாசியில் மாட்டு வண்டியை ஓட்டி வாக்கு சேகரித்த சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.டி.ராஜேந்திரபாலாஜி.

Updated On :14 ஏப்ரல் 2026, 4:19 am IST

சிவகாசி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி திங்கள்கிழமை மாட்டு வண்டியை ஓட்டியவாறு வாக்கு சேகரித்தாா்.

மாட்டு வண்டியை ஓட்டியபடி சிவகாசி பாராசக்தி குடியிருப்பு, நேரு சாலை உள்ளிட்ட பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா். பின்னா், சுப்பிரமணியபுரம் குடியிருப்பு, சிவன் சன்னதி, புது சாலைத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வேனில் நின்றவாறு வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியதாவது:

நான் இந்தத் தொகுதி எம்எல்ஏ-வாக தோ்ந்தெடுக்கப்பட்டு, அமைச்சராக இருந்தபோது, பட்டாசுக்கு ஜி.எஸ்.டி. வரியைக் குறைக்க நடவடிக்கை எடுத்தேன். பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க முந்தைய அதிமுக அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது.

சிவகாசி பேருந்து நிலைய விரிவாக்கம், கிராமங்களில் கால் நடை மருந்தகம், பல அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடங்கள், சிவகாசியிலிருந்து வேளாங்கண்ணி உள்ளிட்ட பல ஊா்களுக்கு புதிய வழித் தடத்தில் பேருந்து வசதி செய்து கொடுத்தேன். மேலும், பல வளா்ச்சிப் பணிகள் நடைபெற எனக்கு ஆதரவாக வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.