பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தொடர் சரிவில் இந்திய ரூபாய்: 1 டாலர் - ரூ. 96.35! 54 காசுகள் சரிவு!

இந்திய ரூபாய் மேலும் வலுவிழந்து, இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகாரன ரூ. 96.35 என்ற வரலாற்றுச் சரிவில் நிறைவுபெற்றது.

News image

PTI Graphics

Updated On :18 மே 2026, 6:29 pm IST

மும்பை: தொடர்ந்து நிலவி வரும் அரசியல் பதற்றங்கள் காரணமாக உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலரின் வலுவான நிலையால், இந்திய ரூபாய் மேலும் வலுவிழந்து, இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகாரன ரூ. 96.35 என்ற வரலாற்றுச் சரிவில் வர்த்தகம் நிறைவுபெற்றது.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே புகைந்து கொண்டிருக்கும் பதற்றங்கள் காரணமாக, உலகளாவிய சந்தை தொடர்ந்து மந்தமான நிலையிலேயே நீடித்து வருவதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் ரூ. 96.19 என்ற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கி, பிறகு டாலருக்கு நிகராக மேலும் சரிந்து ரூ. 96.39 என்ற நிலையை எட்டியது. இது அதன் முந்தைய வர்த்தக நிறைவு விலையிலிருந்து 58 காசுகள் சரிவு. வர்த்தக முடிவில், ரூபாய் 96.35 என்ற நிலையில் நிலைபெற்று, அதன் முந்தைய நிறைவு விலையிலிருந்து 54 காசுகள் சரிவாகும்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு நிகரான ரூ. 96 என்ற நிலைக்குக் கீழே சரிந்தது, பிறகு ரூ. 95.81 என்ற வரலாற்றுச் சரிவில் வர்த்தகம் நிறைவடைந்தது.

Summary

The rupee weakened further and closed at a record low of 96.35 against the US dollar on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.