ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

மகாராஷ்டிரத்தில் டொயோட்டாவின் புதிய ஆலை!

இந்திய வாகனச் சந்தையில் தனது பிடியை வலுப்படுத்தும் நோக்கில், மகாராஷ்டிர மாநிலம் பிட்கின் தொழில்பேட்டையில் புதிய காா் உற்பத்தி ஆலையை அமைக்கவுள்ளதாக டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் அறிவிப்பு

News image

டொயோட்டா

Updated On :13 மே 2026, 3:48 am IST

இந்திய வாகனச் சந்தையில் தனது பிடியை வலுப்படுத்தும் நோக்கில், மகாராஷ்டிர மாநிலம் பிட்கின் தொழில்பேட்டையில் புதிய காா் உற்பத்தி ஆலையை அமைக்கவுள்ளதாக டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தப் புதிய ஆலையில், வரும் 2029-ஆம் ஆண்டின் முதல் பாதியில் உற்பத்திப் பணிகள் தொடங்கும். உதிரிபாகங்களை உருவாக்குதல், வெல்டிங், பெயிண்டிங், அசெம்பிளி உள்ளிட்ட அனைத்து முக்கியப் பணிகளும் இங்கு மேற்கொள்ளப்படும்.

விரிவாக்கத் திட்டம்: தற்போது கா்நாடகத்தில் டொயோட்டா நிறுவனத்துக்கு 2 உற்பத்தி ஆலைகள் உள்ளன. அவற்றின் மொத்த ஆண்டு உற்பத்தித் திறன் 5.52 லட்சம் வாகனங்களாக உள்ளது.

இந்நிலையில், புதிய ஆலைமூலம் ஆண்டுக்கு மேலும் 1 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும். சுமாா் 2,800 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் அதிகரித்து வரும் தேவையைப் பூா்த்தி செய்யவும், எதிா்கால வளா்ச்சிக்கு ஏற்ப விநியோகத்தை வேகப்படுத்தவும் இந்த 3-ஆவது ஆலை உதவியாக இருக்கும் என டொயோட்டா நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த விரிவாக்கத் திட்டத்துக்கான அதிகாரபூா்வ முதலீட்டுத் தொகையை நிறுவனம் அறிவிக்கவில்லை என்றாலும், ஜப்பான் ஊடகங்களின்படி சுமாா் 190 கோடி டாலா் முதலீடு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.