தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பொதுத்துறை எஃகு நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு அசோக் குமார் பாண்டா பரிந்துரை!

செயில் நிறுவனத்தின் உயரிய பதவிக்கு, அந்நிறுவனத்தின் நிதி இயக்குநரான அசோக் குமார் பாண்டாவை, அரசுப் பணியாளர் தேர்வு தேர்வாணையம் பரிந்துரைத்துள்ளது.

News image

செயில்

Updated On :28 மார்ச் 2026, 5:53 pm IST

புதுதில்லி: எஃகு அமைச்சகத்தின் கீழ் இயங்கும், இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை மகாரத்னா நிறுவனமான ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (செயில்), நிறுவனத்தின் உயரிய பதவிக்கு, அந்நிறுவனத்தின் நிதி இயக்குநரான அசோக் குமார் பாண்டாவை, அரசுப் பணியாளர் தேர்வு தேர்வாணையம் பரிந்துரைத்துள்ளது.

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவிக்காக நேர்காணல் முடிவடைந்த நிலையில், இறுதிப் பட்டியலில் இடம்பெற்றிருந்த 10 நபர்களில் பாண்டாவும் ஒருவர்.

இதனிடையில், தற்போதைய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான அமரேந்து பிரகாஷின் பதவிக்காலம் ஏப்ரல் 2, 2026 அன்று முடிவடைய உள்ளது.

இந்த நிலையில், மார்ச் 28 தேதியிட்ட ஓர் அறிவிக்கையில், செயில்-இன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவிக்கு அசோக் குமார் பாண்டாவை பரிந்துரைத்துள்ளதாக பொதுத்துறை நிறுவனங்கள் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

மின் பொறியியலில் தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு, செயில் மேலாண்மைப் பயிற்சியாளராக தனது பணியை தொடங்கினார் அசோக் குமார் பாண்டா. பாண்டா தற்போது ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிதி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.