மும்பை: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான 107 நாள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட கடும் சரிவு, உள்ளிட்டவையால் உலகளாவிய பங்குச் சந்தை எழுச்சி பெற்று, தொடர்ந்து 2வது நாளாக ஏற்றம் கண்டன. இதில் முக்கிய குறியீடான சென்செக்ஸ் இன்றயை வர்த்தக முடிவில் 736 புள்ளிகள் உயர்ந்து நிறைவு செய்தன.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 1,293.12 புள்ளிகள் அதிகரித்து 76,821.07 புள்ளிகளாகவும், நிஃப்டி 388.5 புள்ளிகள் உயர்ந்து 24,011.40 புள்ளிகளை எட்டியது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 736.38 புள்ளிகள் உயர்ந்து 76,264.33 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 231 புள்ளிகள் உயர்ந்து 23,853.90 புள்ளிகளாக நிலைபெற்றது.
அமெரிக்காவும் ஈரானும் தங்கள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை எடுத்துச் செல்லப் பயன்படும் குறுகிய நீர்வழியான 'ஹோர்முஸ் நீரிணை' மீண்டும் திறப்பதற்கும் கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று ஒப்பந்தத்தை இறுதி செய்தன.
இதனையடுத்து, ஜூன் 19 அன்று சுவிட்சர்லாந்தில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அதிகாரிகள் தெரிவித்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இது குறித்து தனது 'ட்ரூத் சோஷியல்' மீடியாவில் பதிவிட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம் குறித்த அறிவிப்புக்குப் பிறகு, உலக சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்குக் சரிந்தன.
சென்செக்ஸில் ட்ரெண்ட், இன்டர்குளோப் ஏவியேஷன், பஜாஜ் ஃபின்சர்வ், அல்ட்ராடெக் சிமெண்ட், எடர்னல் மற்றும் மாருதி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் என்டிபிசி, ஐசிஐசிஐ வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட பங்குகள் சரிந்தன.
நிஃப்டி-யில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டிரென்ட், எச்டிஎஃப்சி லைஃப், ஐஷர் மோட்டார்ஸ் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் ஆகிய பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் என்டிபிசி, ஓஎன்ஜிசி, பஜாஜ் ஆட்டோ, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்தன.
துறைவாரியாக பார்க்கையில், சுகாதாரம் மற்றும் மருந்துத் துறைகளைத் தவிர, அனைத்து முக்கிய குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. நிஃப்டி-யில் ரியாலிட்டி குறியீடு கிட்டத்தட்ட 4 சதவீதம் உயர்ந்து சிறப்பாக இயங்கி நிலையில் ஆட்டோ, உலோகம் மற்றும் நுகர்வோர் பொருட்கள் ஆகிய குறியீடுகள் தலா சுமார் 2 சதவீதம் உயர்ந்தன.
நிஃப்டி மிட்கேப் 100 மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடுகள் தலா 1 சதவீதம் உயர்ந்து முடிவடைந்தன.
மேற்கு ஆசியாவில் கணிசமான வருவாய் ஈட்டும் முக்கிய உள்கட்டமைப்பு நிறுவனமான 'லார்சன் & டூப்ரோ' நிறுவன பங்குகள் 3.2 சதவீதம் உயர்ந்தன. கச்சா எண்ணெய் விலை குறைந்ததன் விளைவாக, எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், டயர் மற்றும் பெயிண்ட் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் கண்டன.
ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி 5 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்த நிலையில், ஜப்பானின் நிக்கெய் 225 குறியீடு கிட்டத்தட்ட 5 சதவீதம் உயர்ந்தன. ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடும் உயர்வுடன் நிறைவடைந்தன.
ஐரோப்பாவில் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமான நிலையில், அமெரிக்க சந்தைகள் வெள்ளிக்கிழமையன்று உயர்ந்து முடிவடைந்தன.
தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமையன்று ரூ. 1,082.18 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் சரிந்து, பீப்பாய் ஒன்றுக்கு 82.90 அமெரிக்க டாலர் என்ற அளவில் உள்ளது.
Summary
Stock markets rose for the second straight session with Sensex closing higher by 736 points on Monday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம் எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 479 புள்ளிகள் சரிவு; நிஃப்டி 23,900க்கு அருகில் நிறைவு!!

பிரதமர் விடுத்த வேண்டுகோள் எதிரொலி: எண்ணெய் விலை உயர்வு, சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி!
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

