புதுதில்லி: வணிக வாகனங்களுக்கான மின்சாரம் மற்றும் ஹைட்ரஜன் சார்ந்த தொழில்நுட்பங்களில் டாடா மோட்டார்ஸ் தொடர்ந்து முதலீடு செய்யும் என்று அதன் தலைவர் என். சந்திரசேகரன் இன்று தெரிவித்தார்.
அதே வேளையில், தூய்மையான போக்குவரத்து முறைக்கு மாறுவதற்கு மின்சாரம், ஹைட்ரஜன் மற்றும் தூய்மையான தொழில்நுட்பங்களின் கலவை அவசியம் என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
2025-26 ஆண்டிற்கான ஆண்டு அறிக்கையில் பங்குதாரர்களிடம் உரையாற்றிய போது, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், போக்குவரத்து சார்ந்த தயாரிப்புகள் மற்றும் அவற்றுக்கான சேவைகள் வழங்கப்படும் விகிதங்கள் மாற்றியமைத்து வருவதாகவும் தெரிவித்தார். தூய்மையான ஆற்றலை நோக்கிய மாற்றம், பாதுகாப்பு குறித்த அதிகரித்த எதிர்பார்ப்புகள் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலியின் மறுசீரமைப்பு ஆகியவை போட்டித்தன்மையை மறுவரையறை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பூஜ்ஜிய உமிழ்வு கொண்ட மின்சார வணிக வாகனங்களின் தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்தும் அதே வேளையில், அதிக சுமை ஏற்றிச் செல்லும் வாகனப் பிரிவுகளுக்கு ஹைட்ரஜன் சார்ந்த தொழில்நுட்பங்களிலும் தொடர்ந்து முதலீடு செய்வோம் என்றார்.
வலுவான நிதி நிலைமை, மேம்படும் வருவாய் மற்றும் சவால்களை எதிர்கொண்டு மீண்டு வரும் திறனில் கவனம் செலுத்துதல் ஆகியவற்றால், நிறுவனம் லாபகரமான வளர்ச்சிப் பயணத்தைத் தொடரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
2025-26 நிதியாண்டில் நிறுவனம் இதுவரை இல்லாத அளவாக ரூ. 83,855 கோடி வருவாயைப் பதிவு செய்தது. இதுவே கடந்த நிதியாண்டில் ரூ. 76,359 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 9.8 சதவீத வலுவான வளர்ச்சியாகும்.
Summary
Tata Motors will keep on investing in electric and hydrogen-based technologies for commercial vehicles.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காற்றாலை, சூரிய மின் உற்பத்தி நிலையங்களை துணை மின்நிலையங்களுடன் இணைக்க தடை

ஹைட்ரஜன் மூலம் இயங்கும் 2 பேருந்துகளை இயக்க தில்லி அரசு திட்டம் - அமைச்சா் பங்கஜ் சிங் தகவல்

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!

இவி-கார்களுக்கு மே மாத தள்ளுபடி அறிவித்த டாடா! நெக்ஸான், பஞ்ச் கார்களுக்கும்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை


