ரியல்மி நிறுவனமானது, தன்னுடைய ரியல்மி சி100எக்ஸ் ஸ்மார்ட்போன், விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவிருக்கிறது. அதிகாரப்பூர்வ தேதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
எனினும், ரியல்மிசி100எக்ஸ் பற்றிய சில தகவல்கள் கசிந்து, செல்போன் வாங்கக் காத்திருப்பவர்களுக்கு கனவாக மாறியிருக்கிறது.
அதாவது 6.7 இன்ச் எச்டி+ எல்சிடி டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் சி100எக்ஸ் ஸ்மார்ட்போன், 120Hz ரிஃப்ரஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியும் உள்ளது.
ஆண்டிராண்டு 16 இயங்குளத்துடன், அடுத்தடுத்து அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்களும் செல்போனின் பயன்பாட்டுக் காலத்தை மேலும் சிறப்பானதாக மாற்றும்.
பலரும் விரும்பும் வகையில் மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட் வசதியுடன் இது அறிமுகமாகிறதாம்.
50 எம்பி ரியர் கேமரா என்றால் புகைப்படங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். முன்பக்க கேமராவும் செல்ஃபிக்களுக்காகவும், விடியோ கால் அழைப்புகளுக்காகவும் 5 எம்பி கேமராவுடன் வருகிறது என்பது கூடுதல் அம்சமாக உள்ளது.
டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்பில் ஐபி65 ரேட்டிங், 8000mAh பேட்டரி என்பதுதான் செல்போன் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்டாக அமையும். சார்ஜ் போடுவது பற்றி கவலையே பட வேண்டாம். இந்த போன் இரண்டு நாள்களுக்கு பேட்டரி பேக்கப் இருக்கும். 45 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது.
நிறம்.. இதுதான் அல்டிமேட். கோல்டன் மற்றும் டீப் ப்ளூ டைட் நிறங்கள் இதனை வாங்க நினைப்பவர்களுக்கு மேலும் ஆசையைத் தூண்டுகிறது.
இவ்வளவு அம்சங்கள் இருந்தாலும் இது ரூ.15 ஆயிரம் என்ற பட்ஜெட் விலையில் வரவிருக்கிறது என்பதுதான் ஹைலைட். இது பற்றிய செய்திகள் வெளியாகத் தொடங்கியதிலிருந்தே செல்போன் வாங்கக் காத்திருப்பவர்களிடையே பல எதிர்பார்ப்புகள் எகிறத் தொடங்கியிருக்கிறதாம்.
Summary
The new Realme C100X smartphone is about to be launched..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?

பட்ஜெட் விலையில் ரெட்மியின் புதிய ஸ்மார்ட்போன்! ஏ7 ப்ரோ அறிமுகம்!

ரியல்மி 16 விற்பனை இந்தியாவில் தொடக்கம்! சிறப்புகள் என்னென்ன?

30 மணி நேர பேட்டரி திறன்! மார்ச் 19-ல் அறிமுகமாகிறது ரியல்மி பி4 லைட்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


