மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் வர்த்தகம்!

இந்திய பங்குச் சந்தை தற்போதைய நிலவரம் பற்றி...

News image

பங்குச் சந்தை... - ANI

Updated On :17 ஏப்ரல் 2026, 11:17 am IST

இந்திய பங்குச் சந்தை வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை காலை முதல் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றது.

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், சில நாள்களாக இறங்குமுகத்தில் இருந்த மும்பை பங்குச்சந்தை மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கும் என்ற நம்பிக்கையில் எழுச்சிப் பெறத் தொடங்கியுள்ளது.

இந்திய பங்குச் சந்தை இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கிய நிலையில், காலை 11.10 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்ந்து 78,231.81 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.

இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 77 புள்ளிகள் உயர்ந்து 24,273.90 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.

சென்செக்ஸில் ஹிந்துஸ்தான், மாருதி, ஐடிசி, ரிலையன்ஸ், டெக் மகேந்திரா, இண்டிகோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்திலும், டிசிஎஸ், ஆக்சிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் வர்த்தகமாகி வருகிறது.

நிஃப்டியைப் பொறுத்தவரை வங்கி, ஃபைனன்ஸ், ஆட்டோ, மிட் கேப், ஸ்மால் கேப் உள்ளிட்ட துறைகளின் பங்குகள் ஏற்றத்துடனும், ஐடி துறை பங்குகள் சரிவுடனும் வர்த்தகமாகி வருகிறது.

Summary

Indian Stock Market Trades Higher!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.