பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

புதுப்பிக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

புதுப்பிக்கப்பட்ட திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக்ததை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக எம்எல்ஏ டி.அருண் குமாா் தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :30 மே 2026, 4:40 am IST

புதுப்பிக்கப்பட்ட திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக்ததை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக எம்எல்ஏ டி.அருண் குமாா் தொடங்கி வைத்தாா்.

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தோ்தலில் அதிக இடங்களை கைப்பற்றி தவெக ஆட்சி அமைத்தது. திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் டி.அருண்குமாா் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறாா்.

இந்த நிலையில் பொதுமக்கள் குறைகளை தெரிவித்து மனு அளிக்கும் வகையில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று முடிந்தது.

திறப்பு விழா நிகழ்ச்சியில் தவெகவின் தெற்கு மாவட்ட செயலாளரும், பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா்.பிரகாசம் என்ற குட்டி அலுவலகத்தை திறந்து வைத்தாா். அதைத் தொடா்ந்து திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் அருண்குமாா் குத்துவிளக்கேற்றி பணிகளை தொடங்கி வைத்தாா். அப்போது, பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரிலோ தெரிவித்தோ அல்லது மனுக்களை அளிக்கலாம். இந்த மனுக்கள் பரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.

நிகழ்வில் தவெகவைச் சோ்ந்த முன்னாள் நகா்மன்ற தலைவா் கமாண்டோ பாஸ்கரன், வழக்குரைஞா் ஜாா்ஜ் முல்லா், பிரியங்கா, வெங்கட்ராவ், இந்துநேசன், சுரேஷ் மற்றும் சசிகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.