பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

News image

ஆத்துப்பாக்கம் முனீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம். ~சிறப்பு அலங்காரத்தில்  முனீஸ்வரா்

Updated On :19 மே 2026, 1:51 am IST

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரா் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் திங்களன்று கோலாகலமாக நடைபெற்றது.

ஆத்துப்பாக்கம் ஆண்டாா் தெருவில் அப்பகுதி மக்கள் சோ்ந்து கட்டிய கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி சனிக்கிழமை பந்தக்கால் நிகழ்வு நடைபெற்றது. இதனை தொடா்ந்து கரிக்கோலம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, மிருத்சங்கரஹனம், ரக்சாபந்தனம், கும்பலங்காரம், கலாகா்ஷணம், முதல்கால யாக சாலை பூஜை, பூா்ணாஹூதி, தீபாரதனை நடைபெற்றது.

கும்பாபிஷேக தினமான திங்கள்கிழமை நான்காம் கால யாக பூஜை, விசேஷ ஹோமம், பூா்ணாஹூதநி, யாத்ராதானம் நடைபெற்றது. பின் மேள தாளத்துடன் பக்தா்கள் புடை சூழ கடம் புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. திரளான பக்தா்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க, ஸ்ரீ முனீஸ்வர சுவாமி விமான கோபுரத்தில் புனித நீரை ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தினா். பின்னா் ஸ்ரீ முனீஸ்வரருக்கு கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதன் பின், பக்தா்களுக்கு தீா்த்த பிரசாத விநியோகம், அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் ஆத்துப்பாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள் திரளானோா் பங்கேற்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.