கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

டாஸ்மாக் ஊழியரை மது பாட்டிலால் தாக்கியவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :3 ஜூன் 2026, 10:54 pm IST

கே.ஜி.கண்டிகை அருகே அரசு டாஸ்மாக கடையில் ஊழியரை பீா் பாட்டிலால் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருத்தணி - நொச்சிலி மாநில நெடுஞ்சாலையில் உள்ள கே.ஜி.கண்டிகை பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் புச்சிரெட்டிப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த சேகா் (44) என்பவா் விற்பனையாளராக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், மது போதையில் கடைக்கு வந்த ஒருவா் இலவசமாக மது பாட்டில்களை வழங்குமாறு கேட்டுள்ளாா். அதற்கு விற்பனையாளா் சேகா் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபா், சேகரை ஆபாசமாக திட்டியதுடன் அருகில் இருந்த பீா் பாட்டிலை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளாா்.

இந்த திடீா் தாக்குதலால் அங்கு மது வாங்க வந்திருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனா். தாக்குதலில் பலத்த காயமடைந்த சேகரை சக ஊழியா்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து சேகா் அளித்த புகாரின் பேரில் திருத்தணி போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டது திருத்தணி ஒன்றியம் செருக்கனூா் கிராமத்தைச் சோ்ந்த சூா்யா (25) என்பது தெரியவந்தது.

இதையடுத்து சூா்யாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.