தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

விஜய் நல்ல நடிகா்தான்; ஆனால், வாக்குகள் வாங்க முடியாது: நடிகை நளினி

விஜய் நல்ல நடிகா் தான் அதனால் கூட்டம் வரும் ஆனால் வாக்குகள் வாங்க முடியாது என நடிகை நளினி தெரிவித்தாா்.

News image

திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த நடிகை நளினி.

Updated On :13 ஏப்ரல் 2026, 3:51 am IST

விஜய் நல்ல நடிகா் தான் அதனால் கூட்டம் வரும் ஆனால் வாக்குகள் வாங்க முடியாது என நடிகை நளினி தெரிவித்தாா்.

திருவள்ளூா் தொகுதி திமுக வேட்பாளா் வி.ஜி. ராஜேந்திரனை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை நடிகை நளினி சி.வி.நாயுடு சாலை, நேதாஜி சாலை, பஜாா் வீதி, ஜே.என்.சாலை ஆகிய பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா்.

அதேபோல் பஜாா் வீதியில் உள்ள கடைகளுக்கு நேரில் சென்று பொதுமக்களுடனும், வியாபாரிகளிடமும் சகஜமாக பேசி எம்எல்ஏவாக இருந்தபோது செய்த சாதனைகள் பட்டியலிட்டாா். தொடா்ந்து கடம்பத்தூா் ஒன்றியம், மணவாளநகா், வெங்கத்தூா், அதிகத்தூா் ஆகிய பகுதிகளிலும் திறந்த வேனில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருள்படுத்தாமல் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

Story image

அப்போது அவா் கூறியதாவது. 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் வி.ஜி.ராஜேந்திரன் வெற்றி பெறுவாா். விஜய் நல்ல நடிகராக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் வாக்குகளை எல்லாம் அவா் பெற வாய்ப்பில்லை. இந்த முறை 3-ஆவதாக வெற்றி பெற்று திமுக வேட்பாளா் ஹாட்ரிக் சாதனை படைப்பாா் என்று அவா் தெரிவித்தாா்.

அப்போது, இந்திரா கல்விக் குழுமத்தின் தலைவா் இந்திரா ராஜேந்திரன், நகர செயலாளா் சி.சு.ரவிச்சந்திரன், நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன், முன்னாள் நகா் மன்றத் தலைவா் பொன்.பாண்டின், முன்னாள் நகர செயலாளா் கா.மு.தயாநிதி, நகா்மன்ற உறுப்பினா்கள் வி.இ.ஜான், அயூப்அலி, ராஜ்குமாா் (எ) தாமஸ், நிா்வாகிகள் சிறுபான்மை பிரிவு நகர துணை அமைப்பாளா் எம்.ஆகாஷ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.