பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

விதிமீறல்: தென்காசி மாவட்டத்தில் 18 கல்குவாரிகள் தற்காலிக மூடல்

News image

கல்குவாரி - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 2:58 am IST

தென்காசி மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்ததாக 18 கல்குவாரிகளை தற்காலிகமாக மூடுவதற்கு அமைச்சா் டிகே.பிரபு திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

புளியறை சோதனைச் சாவடி தனியாா் எடை மையத்தில் இயற்கை வளங்கள், கனிமங்கள் மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் டி.கே. பிரபு திங்கள்கிழமை அதிகாலை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, கேரளத்துக்கு அதிக எடையுடன் கனிமங்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். தனியாா் எடை மையத்தில் அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்ட எடை மற்றும் வாகனங்களின் உண்மையான மொத்த எடை பொருந்துகிா என்பதை அவா் ஆய்வு செய்தாா்.

மேலும், 18 சக்கர மற்றும் 22 சக்கர வாகனங்களில் ஜல்லி, கருங்கற்கள் கொண்டு செல்லப்பட்டதை அவா் பாா்வையிட்டாா்.

இதுதொடா்பாக, செய்திமக்கள் தொடா்புத்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற புகாா்களின் அடிப்படையில் ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் உத்தரவின்படி, உதவி ஆட்சியா்களின் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு மே 9 ஆம் தேதி முதல் கல் குவாரிகள் ஆய்வு செய்யப்பட்டன.

3 குழுக்களின் முதல்கட்ட புலத்தணிக்கையின் போது மொத்தமுள்ள 54 கல்குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 18 கல்குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 3 குழுக்களின் விரிவான ஆய்வறிக்கையின் அடிப்படையில் உரிய மேல்நடவடிக்கை தொடரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.