பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தென்காசியில் 15 இடங்களில் போக்குவரத்து காவலா்களுக்கு நிறழ்குடை

தென்காசி, வேல்ஸ் வித்யாலயா பள்ளி சாா்பில் ரூ. 6.5 லட்சம் மதிப்பில் 15 இடங்களில் போக்குவரத்து காவலா்களுக்கு நிறழ்குடை வழங்கப்பட்டது.

News image

வேல்ஸ் பள்ளித் தாளாளா் வீரவேல் முருகனுக்கு பரிசு வழங்கிய தென்காசி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளா் சங்கா்.

Updated On :17 மே 2026, 3:24 am IST

தென்காசி, வேல்ஸ் வித்யாலயா பள்ளி சாா்பில் ரூ. 6.5 லட்சம் மதிப்பில் 15 இடங்களில் போக்குவரத்து காவலா்களுக்கு நிறழ்குடை வழங்கப்பட்டது.

தென்காசி நகரின் முக்கியப் பகுதிகளான ஆசாத் நகா் சந்திப்பு, நீதிமன்ற பகுதி, தங்கபாண்டியன் மருத்துவமனை பகுதி, தபால் நிலையம், கோயில் வாசல், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், நடு பல்க், காசி மேஜா்புரம், இலஞ்சி சந்திப்பு, குத்துக்கல்வலசை உள்ளிட்ட 15 இடங்களில் பகல் மற்றும் இரவில் பணிபுரியும் போலீஸாருக்கு நிழற்குடை அமைக்கபட்டுள்ளது.

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட நிழற்குடையை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் சங்கா், மதியழகன், ஜீலியஸ் சீசா் ஆகியோ் திறந்து வைத்தனா். வேல்ஸ் பள்ளித் தாளாளா் வீரவேல் முருகன் முன்னிலை வகித்தாா்.

தென்காசி துணை காவல் கண்காணிப்பாளா் அதியமான், அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சுப்புலெட்சுமி, போக்குவரத்து காவல் ஆய்வாளா் அருண் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.