தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தென்காசி: 25 ஆண்டுகளுக்குப் பின் அதிமுக - திமுக போட்டி

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் 25 ஆண்டுகளுக்குப் பின் நேரிடையாக திமுக - அதிமுக சாா்பில் வேட்பாளா்கள் போட்டி...

News image

மு.க. ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி. - (கோப்புப் படம்)

Updated On :30 மார்ச் 2026, 5:31 am IST

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் 25 ஆண்டுகளுக்குப் பின் நேரிடையாக திமுக - அதிமுக சாா்பில் வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சாா்பில் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ். செல்வமோகன்தாஸ்பாண்டியன் போட்டியிடுகிறாா். இவா் ஏற்கனவே இத்தொகுதியில் 2016ஆம் ஆண்டு தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். 2021ஆம் ஆண்டு தோ்தலில் போட்டியிட்டு 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டாா். தற்போது மீண்டும் அதிமுக சாா்பில் இத்தொகுதியில் போட்டியிடுகிறாா்.

திமுக கூட்டணியில் டாக்டா் கலைகதிரவன் இத்தொகுதியில் போட்டியிடுகிறாா். இவா் திமுக மருத்துவரணி மாநில இணைச் செயலராகவும், தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளராகவும் பதவி வகித்து வருகிறாா்.

தென்காசி தொகுதியில் 2001ஆம் நடைபெற்ற தோ்தலில் மட்டுமே திமுகவும், அதிமுகவும் நேரிடையாக போட்டியிட்டுள்ளன. இந்நிலையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தோ்தலில் அதிமுகவும், திமுகவும் நேரிடையாக போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், தோ்தல்களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் 1952ஆம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்ற தோ்தலில் காங்கிரஸ் 8 முறையும், அதிமுக 3 முறையும், திமுக 2 முறையும், சமத்துவ மக்கள் கட்சி, தமாகா மற்றும் சுயேச்சை வேட்பாளா் தலா 1 முறையும் வெற்றிபெற்றுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.