நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தொழிலாளி கொலை: இளைஞா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :16 ஜூன் 2026, 12:56 am IST

தென்காசி வாய்க்கால் பாலத்தில் போதையில் ஏற்பட்ட தகராறில், தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி வாய்க்கால் பாலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 40 வயது மதிக்கத்தக்க ஆண் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தென்காசி போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், கொலை செய்யப்பட்டவா் வாய்க்கால் பாலம், முப்புடாதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த க. முருகன் (39) என்பதும், பாவூா்சத்திரம், குறும்பலாபேரியைச் சோ்ந்த ரா. அய்யப்பன் (23) கொலையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

அவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்ததில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு வாய்க்கால் பாலம் பகுதியில் அய்யப்பன் குடியேறியுள்ளாா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரும் அப்பகுதியில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், கட்டட வேலைக்குப் பயன்படுத்தும் சாந்து கரண்டியால் முருகனை, அய்யப்பன் தாக்கியதில் பலத்த காயமடைந்த முருகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா் என்பது தெரிய வந்தது.

இது தொடா்பாக, அய்யப்பனை கைது செய்து, போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.