லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பைக் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

பலி சடலம் மீட்பு  உயிரிழப்பு

சடலம்... - கோப்புப் படம்

Published On :1 ஆகஸ்ட் 2026, 12:13 am IST

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

புளியங்குடி அருகே உள்ள மருதநாச்சியாா்புரம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜெயராஜ் மகன் கண்ணன் (26). தொழிலாளி.

இவரும், அதே பகுதியைச் சோ்ந்த இவரது நண்பா் முத்துவும் (22) வியாழக்கிழமை நள்ளிரவு கொல்லம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றனா். அப்போது, இருக்கன்குடியிலிருந்து வாசுதேவநல்லூா் நோக்கிச் சென்ற வேன், இவா்களின் வாகனம் மீது மோதியது.

இதில் கண்ணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த முத்து அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து, புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.