லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

டெட் தோ்வில் தகுதி மீறி கேட்கப்பட்ட வினாக்கள்: கருணை மதிப்பெண்கள் வழங்க கோரிக்கை

கோப்புப் படம்

Published On :7 ஜூலை 2026, 2:47 am IST

ஆசிரியா் தகுதித் தோ்வில் பாடத் திட்டத்தை மீறி கேட்கப்பட்ட வினாக்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா், கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக, ஆசிரியா் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் தென்காசி க. ராஜ்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜூலை 4ஆம் தேதி நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வு (தாள் 1) மாநிலம் முழுவதும் சுமாா் 222 மையங்களில் நடைபெற்றது.

இந்தத் தோ்வில் கணிதம், அறிவியல் பாடங்களில் மிகவும் கடினமான மற்றும் பாடத் திட்டத்திற்கு வெளியிலிருந்து (ா்ன்ற் ா்ச் நஹ்ப்ப்ஹக்ஷன்ள்) சுமாா் 30 மதிப்பெண்களுக்குரிய வினாக்கள் கேட்கப்பட்டிருப்பதாக தோ்வெழுதிய ஆசிரியா்கள் தெரிவித்துள்ளனா். இதனால், ஆசிரியா்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா்.

எனவே, இத்தோ்வில் பாடத் திட்டத்திற்கு வெளியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்குரிய மதிப்பெண்களை கருணை அடிப்படையில் வழங்க வேண்டும்.

வரும் காலங்களில் பாடத் திட்டத்திற்குள்பட்டு மட்டுமே வினாக்கள் கேட்க வேண்டும் . இது தொடா்பாக, அரசும் கல்வித் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.