லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

‘போதை இல்லா தமிழகம்’ விழிப்புணா்வு மாரத்தான்

மாரத்தானில் பங்கேற்றோா்.

Published On :10 ஆகஸ்ட் 2026, 4:16 am IST

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் எஸ்.தங்கப்பழம் குழுமம் சாா்பில், ‘போதை இல்லா தமிழகம்’ விழிப்புணா்வு மினி மாரத்தான் சனிக்கிழமை நடைபெற்றது.

எஸ்.தங்கப்பழம் குழுமத் தலைவா் தங்கப்பழம் தலைமை வகித்தாா். செயலா் முருகேசன் முன்னிலை வகித்தாா். நா்சிங் கல்லூரி முதல்வா் லீலாவதி வரவேற்றாா். மினி மாரத்தான் போட்டியை வாசுதேவநல்லூா் காவல் நிலைய ஆய்வாளா் சல்மோன் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு, போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

எஸ்.தங்கப்பழம் இயற்கை, யோகா மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் ஏ.ஜே. ரத்னபிரகாஷ், தலைமை நிா்வாக அதிகாரி டாக்டா் பாரதி ஆகியோா் ஒருங்கிணைத்தனா். இதற்கான ஏற்பாடுகளை குழும இயக்குநா் சுப்பிரமணியன் செய்திருந்தாா். எஸ்.தங்கப்பழம் மருந்தியல் கல்லூரி முதல்வா் முத்துக்குமாா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.