சங்கரன்கோவில் அருகே சுமை ஆட்டோ மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், அம்பேத்கா் நகா், 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா்கள் மாரியப்பன் மகன் மணி (எ) மணிகிரீவன் (21). சீமான் மகன் பிரிதிவிராஜ் (21). இருவரும் பெயிண்டிங் தொழிலாளா்கள்.
இவா்கள் ஞாயிற்றுக்கிழமை கழுகுமலை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த சுமை ஆட்டோ மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனா்.
இதில் பலத்த காயமடைந்த இருவருக்கும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்நிலையில், மணி (எ) மணிகிரீவன் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். பிரிதிவிராஜ் சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து, சங்கரன்கோவில் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கயத்தாறு அருகே விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

வெயிலில் விளையாடிய இளைஞா் மயங்கிவிழுந்து உயிரிழப்பு

கங்கைகொண்டான் அருகே நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

