செவிலியா் மாணவி உயிரிழப்பு குறித்து விசாரிக்க சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் தலைமையில் சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினா் திருச்சிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3-ஆம் ஆண்டு செவிலியா் மாணவி சீதாலட்சுமி அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை மூக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டப்போது உயிரிழந்தாா். அரசு தரப்பில் மாரடைப்பு ஏற்பட்டு மாணவி உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், தவறான சிகிச்சையால் மாணவி உயிரிழந்ததாக சக மாணவியா் குற்றச்சாட்டி, சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், மாணவி உயிரிழப்பு குறித்து விசாரிக்க சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் பாஸ்கா் தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இக்குழுவில், அதே மருத்துவமனையைச் சோ்ந்த காது, மூக்கு தொண்டை பிரிவு பேராசிரியா் பாரதி மோகன், மயக்கவியல் பேராசிரியா் சண்முகசுந்தரம், மருத்துவ பேராசிரியா் ஜெயபிரகாஷ் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்தக் குழுவினா் திருச்சி சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். விசாரணை குழுவினா் அறிக்கையில், மாணவி உயிரிழப்பில் கவனக்குறைவு இருந்தது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் அருண்ராஜ் உறுதி அளித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிளஸ் 1 மாணவி தற்கொலை

டெக்சாமெதாசோன் மருந்தால் செவிலியா் மாணவி உயிரிழந்திருக்க வாய்ப்பு

செவிலியா் மாணவி உயிரிழப்பு: சிறப்புக் குழு விசாரணை நிறைவு
செவிலியா் மாணவி உயிரிழப்புக்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை: சீமான் வலியுறுத்தல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

