முன்னாள் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி மீதான வழக்கில், மீண்டும் விசாரணையை தொடங்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியுள்ளது.
கடந்த 2011 அதிமுக ஆட்சியின்போது, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, அத்துறையில் வேலை வாங்கித் தருவதாகப் பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கில் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை கடந்த 2023 ஜூன் மாதம் கைது செய்தது. பின்னா், 2024 செப்டம்பரில் உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால், மாநில அரசின் அனுமதி கிடைக்காததால், வழக்கு விசாரணை தொடங்காமல் நிலுவையில் உள்ளது.
தற்போது புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி மீதான வழக்கில் விசாரணையை தொடங்க அனுமதி கோரி தலைமைச் செயலா் எம்.சாய்குமாருக்கு அமலாக்கத் துறை சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பணமுறைகேடு வழக்கு: கேரள முன்னாள் முதல்வா் மகளுக்கு மீண்டும் அழைப்பாணை

சட்டவிரோத இரும்பு கனிமச் சுரங்க வழக்கில் ரூ. 1,023 கோடி சொத்துகள் முடக்கம்

ரயில் நிலையங்கள் அருகே 159 மதுக்கடைகளை அகற்ற கோரி தமிழக அரசுக்கு தெற்கு ரயில்வே கடிதம்

பண முறைகேடு வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

