திமுக ஆதரவுடன் முதல்வராகப் போவதாகவும் இதுபற்றி தில்லியில் பாஜகவிடம் பேசிவிட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"எம்எல்ஏக்கள் தன்னை சட்டப்பேரவைக் குழுத் தலைவராக நியமித்ததாக எடப்பாடி பழனிசாமி கூறியது தவறு. எம்எல்ஏக்கள் கூட்டம் எங்கு நடந்தது? எப்போது நடந்தது? 47 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட இபிஎஸ் அளித்த கடிதம் போலியானது. கையெழுத்து போலியானது.
புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டபோது இபிஎஸ் எங்களிடம் என்ன சொன்னார்? 'நான் மேலே பேசிவிட்டேன், அவர்கள் ஓகே சொல்லிவிட்டனர். நான் முதல்வராக ஆகப் போகிறேன். திமுக வெளியில் இருந்து ஆதரவு தரப்போகிறது' என்று கூறினார்.
புதுவையில் என்ன பேசினார் என்று இபிஎஸ் வெளிப்படையாகச் சொல்லத் தயாரா?
எம்எல்ஏக்கள்தான் கொறடா, சட்டப்பேரவைக் குழுத் தலைவரை தேர்வு செய்ய வேண்டும். அதன்படி, பெரும்பான்மை எம்எல்ஏக்களாகிய நாங்கள் தேர்வு செய்த கொறடா, சட்டப்பேரவைக் குழுத் தலைவர் அடங்கிய கடிதத்தை நாங்கள் பேரவைத் தலைவரிடம் அளித்திருக்கிறோம். இரண்டு கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம்.
திருமாவளவனை முதல்வராக்க முயற்சி நடைபெற்றது. திருமாவளவன் மட்டும் முதல்வர், மற்ற அமைச்சர்கள் அனைவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று திமுக கூறியது. ஆனால் முதல்வராகத் தான் இருப்பேன் என்று இபிஎஸ் கூறிவிட்டார்.
47 தொகுதிகள் வெற்றி பெற்றதை மிகப்பெரிய வெற்றி என்று இபிஎஸ் கூறுகிறார். அவர் எல்லாம் பொதுச் செயலாளரா? தோல்விக்கு பொறுப்பேற்க இபிஎஸ் மறுக்கிறார்" என்று பேசினார்.
Summary
EPS claimed he would become Chief Minister with support of the DMK: C.V. Shanmugam
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெகவுக்கு ஆதரவு! சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் விஜய் சந்திப்பு!

திமுக ஆதரவோடு முதல்வராக நினைத்தார் இபிஎஸ்: முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்

அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை: சி.வி. சண்முகம்

தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

