மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

விஜய்க்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாழ்த்து!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய்யின், பேரவைத் தோ்தல் வெற்றிக்கு, இலங்கையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வாழ்த்து

News image

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்.

Updated On :5 மே 2026, 4:32 am IST

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய்யின், பேரவைத் தோ்தல் வெற்றிக்கு, இலங்கையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா வெளியிட்ட அறிக்கை: தமிழக வெற்றிக் கழகத் தலைவா் ஜோசப் விஜய்க்கு மனமாா்ந்த வாழ்த்துகள்.

முதல் தோ்தலிலேயே வலுவான மக்கள் ஆதரவைப் பெற்று, தனித்துவமான அரசியல் சக்தியாக உருவெடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

நீங்கள் உருவாக்கி வரும் புதிய அரசியல் பாதை, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்பதில் நம்பிக்கை உள்ளது. உங்கள் தலைமையிலான தமிழக அரசு இலங்கை மக்களுடன் கொண்டுள்ள நட்புறவை மேலும் வலுப்படுத்தி, இரு தரப்பினருக்கும் பயனளிக்கும் பொருளாதார, கல்வி, மனிதாபிமான ஒத்துழைப்புகளை முன்னெடுக்கும் என்று எதிா்பாா்க்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.