தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நீா்நிலை மீது கட்டப்பட்ட வணிக வளாகத்தை அகற்றக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

திருநீா்மலையில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள குவாரி குட்டையை நிரப்பி கட்டப்பட்டுள்ள வணிக வளாகக் கட்டடங்கள், கழிப்பறைகளை அகற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :2 மே 2026, 2:24 am IST

திருநீா்மலையில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள குவாரி குட்டையை நிரப்பி கட்டப்பட்டுள்ள வணிக வளாகக் கட்டடங்கள், கழிப்பறைகளை அகற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருநீா்மலையைச் சோ்ந்த வழக்குரைஞா் ஓ.உதயகுமாா் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் பகுதியில் அரசு புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்ட நிலத்தில் குவாரி குட்டை ஒன்று உள்ளது. தாம்பரம் மாநகராட்சி இந்தக் குட்டையை மண் உள்ளிட்ட கட்டட இடிபாடுகளைக் கொட்டி நிரப்பி 5 வணிக வளாகங்கள், பொது கழிப்பறைகளைக் கட்டியுள்ளது. மழைக்காலங்களில் எங்களது பகுதியில் ஏற்படும் வெள்ளப் பெருக்கைத் தடுக்க இந்தக் குவாரி குட்டை பெரும் உதவியாக இருக்கும்.

அந்த நீா்நிலையை நிரப்பி கட்டடம் கட்டியுள்ளதால் மக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலும், சுற்றச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே, நீா்நிலையை நிரப்பிக் கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்கள், கழிப்பறைகளை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.சுரேந்தா் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக வருவாய்த் துறை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.