தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான வீட்டினை ஹைதராபாத் மாநகராட்சி நிர்வாகம் பறிமுதல் செய்தது.
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெ. ஜெயலலிதாவுக்குச் சொந்தமான வீடு ஒன்று ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனி, வெங்கடேஸ்வரா ஹில்ஸ் பகுதியில் யூசுஃப்கதா வட்டத்தில் உள்ளது. இது ஜெயலலிதா பெயரிலேயே பதிவு செய்யப்பட்டதாகும்.
இந்த வீட்டுக்குச் சொத்து வரி கடந்த 2017-க்கு பிறகு செலுத்தப்படவில்லை. இதனால், வரி பாக்கி ரூ. 82 லட்சத்தைக் கட்டாமல் விட்ட காரணத்தால் ஹைதராபாத் மாநகராட்சி நிர்வாகம் அந்தச் சொத்தை பறிமுதல் செய்துள்ளது.
ஹைதராபாத் மாநகராட்சி நிர்வாகம் 2025-26 ஆம் ஆண்டு வரி செலுத்த அறிமுகப்படுத்திய திட்டமான ஒரே தவணையில் வரியை செலுத்தும் திட்டத்தின் மூலம் சொத்து வரி நிலுவையில் 90% வட்டியை தள்ளுபடி செய்கிறது.
இதன்மூலம் சொத்து உரிமையாளர்கள் நிலுவைத் தொகை மற்றும் 10% வட்டியை மார்ச் 31, 2026-க்குள் செலுத்த வேண்டும். இதன்படி, ரூ. 82.91 லட்சம் நிலுவை வரி ஜெயலலிதாவின் சொத்திற்கு செலுத்தப்படவேண்டியிருந்தது.
இதனை வசூலிக்க பலமுறை முயற்சி எடுத்தபோதிலும் சம்பந்தப்பட்ட நபர்கள் வரியை செலுத்த முன்வரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜெயலலிதாவுக்குச் சொந்தமான இல்லத்தைப் பறிமுதல் செய்த ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் - கோப்புப் படம்
கடந்த பிப்ரவரி மாதம், ஹைதராபாத் மாநகராட்சி துணை ஆணையர் சொத்து தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அப்னுப்பினார். ஆனால், அதற்கு எந்த பதிலும் வராததால் அவர்கள் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான வீட்டைப் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, உதவி மாநகராட்சி ஆணையர் மற்றும் பணியாளர்களின் முன்னிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிலுவை வரி செலுத்தப்படும் வரை அந்தச் சொத்து ஹைதராபாத் மாநகராட்சியின் வசம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Summary
GHMC seizes property belonging to former Tamil Nadu CM J Jayalalithaa over property tax dues
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சொத்துவரியுடன் வணிக உரிமை கட்டணம் இணைப்பு: எம்சிடி அறிவிப்பு

சொத்து வரி செலுத்த க்யூஆர் கோடு! சென்னை மாநகராட்சி அறிமுகம்

சென்னையில் சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்க நோட்டீஸ்! தோ்தலுக்குப் பின் தீவிர நடவடிக்கை!

சொத்து, குப்பை வரிகளை குறைக்க வேண்டும்: வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டத்தில் வலியுறுத்தல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


