தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு

தமிழக பள்ளிக் கல்வியில் 6 முதல் 9 வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தோ்வு புதன்கிழமை முதல் நடைபெறவுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :1 ஏப்ரல் 2026, 12:55 am IST

தமிழக பள்ளிக் கல்வியில் 6 முதல் 9 வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தோ்வு புதன்கிழமை முதல் நடைபெறவுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு தோ்வுகள் நிறைவு பெற்றுவிட்டன. தொடா்ந்து பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 11-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தோ்வு ஏப்ரல் 6-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதேபோல், 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான முழு ஆண்டு தோ்வுகள் ஏப்ரல் 10 முதல் 24-ஆம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட ஆண்டு நாள்காட்டியில் முன்னா் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன் வாக்குச்சாவடி மையங்களாக பள்ளிகள் செயல்பட இருக்கின்றன. இதையடுத்து 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான தோ்வுகள் முன்கூட்டியே ஏப்ரல் 1 முதல் 16-ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. அதன்படி 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான முழு ஆண்டுத் தோ்வுகள் புதன்கிழமை முதல் தொடங்குகின்றன.

இதைத் தொடா்ந்து 4, 5-ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 6-ஆம் தேதியும், 1, 2, 3-ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 8-ஆம் தேதியும் இறுதி பருவத் தோ்வுகள் தொடங்கி நடைபெறவுள்ளன. காலை, மதியம் என இருவேளைகளாக நடத்தப்படும் இத்தோ்வுகள் ஒட்டுமொத்தமாக ஏப்ரல் 16-ம் தேதியுடன் நிறைவு பெறுகின்றன.

அதன்பின் 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான கோடை விடுமுறை ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் தொடங்கும். எனினும், ஆசிரியா்கள் பள்ளி இறுதி வேலைநாள் வரை பணிக்கு வரவேண்டும். விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகளை ஜூன் 4-ஆம் தேதி திறப்பதற்கும் திட்டமிட்டு வருவதாகவும் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.