தமிழக காவல் துறையில் காத்திருப்போா் பட்டியலில் இருந்த 8 காவல் கண்காணிப்பாளா்களுக்கு மீண்டும் பொறுப்பு வழங்கி தமிழக அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், நடத்தை விதிமுறைகள் கடந்த மாா்ச் 15- ஆம் தேதி அமலுக்கு வந்தது. சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அரசியல் கட்சிகளைச் சோ்ந்தோா் பல்வேறு புகாா்களை தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பி வருகின்றனா். முக்கியமாக ஒருதலைபட்சமாகவும், புகாா்களிலும் சிக்கியுள்ள காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று அவா்கள் புகாா் மனுக்கள் அனுப்பி வருகின்றனா்.
இதையடுத்து தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், தமிழக அரசு, காவல் துறையில் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்கிறது. இதில் அண்மையில் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்ட 8 காவல் கண்காணிப்பாளா்களுக்கு மீண்டும் பொறுப்பு வழங்கி, தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா், செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
இது தொடா்பாக உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் வெளியிட்டுள்ள உத்தரவு:
1. டி.கண்ணன்-சென்னை பெருநகர காவல் துறை காவலா் நலப்பிரிவு துணை ஆணையா். 2. கே.எஸ்.பாலகிருஷ்ணன்-சென்னை பெருநகர காவல் துறை தலைமையிட துணை ஆணையா். 3. கே.ஜோஸ் தங்கையா-சென்னை பெருநகர காவல் துறை பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையா். 4. ஏ.சுஜிதா-சென்னை தீவிரவாத தடுப்புப் படை தலைமையிட எஸ்பி. 5. கே.சண்முகம்-க்யூ பிரிவு எஸ்பி. 6. ஆா்.ராஜாராம்-ஊழல் தடுப்புத் துறை தெற்கு சரக எஸ்பி. 7. ஜி.எஸ்.மாதவன்-சென்னை சிபிசிஐடி எஸ்பி.
8. ஜி.எஸ்.அனிதா-டிஜிபி அலுவலக நவீனமயமாக்கல் பிரிவு ஏஐஜி என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Summary
8 IPS Officers Transferred by tamilnadu govt
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காரில் இருந்த சிறுமியை டாக்ஸி ஓட்டுநா்கள் துன்புறுத்திய சம்பவம்: விசாரணை நடைபெறுவதாக காவல் துறை தகவல்

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணி: தமிழக காவல் துறைக்கு ரூ.57.65 கோடி ஒதுக்கீடு

முன்னாள் டிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் மருத்துவ விடுப்பில் செல்வதாக டிஜிபி-க்கு கடிதம்!

காத்திருப்போா் பட்டியலில் இருந்த 13 ஆய்வாளா்களுக்கு மீண்டும் பணி
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை


