ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன்!

ராஜபாளையம் தொகுதியில் தமமுக வோட்பாளராக ஜான் பாண்டியனின் மனைவி களமிறக்கப்பட்டுள்ளார்.

News image

பிரிசில்லா ஜான் பாண்டியன்

Updated On :29 மார்ச் 2026, 12:34 pm IST

ராஜபாளையம் தொகுதியில் தமமுக வோட்பாளராக ஜான் பாண்டியனின் மனைவி களமிறக்கப்பட்டுள்ளார்.

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த தொகுதியில் த.ம.மு.க. சார்பாக வேட்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரிசில்லா ஜான் பாண்டியன் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் நெல்லையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் எனது மனைவியும், பொதுச்செயலாளருமான வழக்கறிஞர் பிரிசில்லா பாண்டியன் போட்டியிடுகிறார்.

ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த ஓராண்டாகவே தீவிர களப்பணி ஆற்றி வருகிறோம். அங்கு பிரதான பிரசனையாக குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. தொழிலாளர்கள் மற்றும் ஏழை, எளியவர்களுக்கு ஏராளமான பிரசனைகள் இருக்கின்றன. அவை அனைத்தையும் தீர்த்து வைப்போம். இன்று மாலையே ராஜபாளையத்தில் முகாமிட்டு களப்பணியை தொடங்க உள்ளோம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம். தமிழக முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்த கூட்டணியின் தலைவரான எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் அரியணையில் அமர வைப்போம். எங்களது வேட்பாளர் சாதி, மத பேதம் இன்றி அனைத்து சமுதாய மக்களுக்கும் சேவை செய்வார்.

தொழிலாளர்கள் நிறைந்த அந்த பகுதியில் அவர்களது வாழ்வு மேம்பட கடினமாக உழைப்பார். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணிப்பு செய்து அதனை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின் போது த.ம.மு.க மாநில இளைஞரணி செயலாளர் வியங்கோ, மகளிர் அணி செயலாளர் வினோலின் நிவேதா, துணை பொதுச்செயலாளர் சண்முகசுதாகர், மண்டல தலைவர் கண்மணி மாவீரன், மாவட்ட செயலாளர் துரைப்பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Summary

In the upcoming assembly elections, the Rajapalayam assembly constituency has been allotted to the Tamilaga Makkal Munnetra Kazhagam (TMMK) as part of the National Democratic Alliance (NDA).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.