தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கரூரில் போட்டியிடும் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன்..! கூட்ட நெரிசல் வழக்கில் கைதானவர்!

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கரூரில் போட்டியிடும் மதியழகன் குறித்து...

News image

தவெக தலைவர் விஜய்யுடன் மதியழகன். - படம்: எக்ஸ் / மதியழகன்

Updated On :29 மார்ச் 2026, 12:31 pm IST

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கரூரில் வி.பி. மதியழகன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசலில் அந்த மாவட்ட செயலாளாரக இருந்த மதியழகன் கைது செய்யப்பட்டு 15 நாள்கள் காவலில் இருந்து ஜாமீனில் வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறார். கரூர் கூட்ட நெரிசல் தவெக கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கோட்டையாக கருதப்பட்டு வந்த கரூர் தொகுதியில் இருந்து அவர் மாற்றபட்டு இந்தமுறை கோவை தெற்கில் போட்டியிடுவதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Karur stampede district secretary Mathiyazhagan to contest in Karur!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.