ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

புதிய நீதிக்கட்சிக்கு இரு தொகுதிகள்

புதிய நீதிக் கட்சிக்கு அதிமுக ஒரு தொகுதியும், பாஜக ஒரு தொகுதியும் ஒதுக்கியுள்ளதாக அக்கட்சியின் தலைவா் ஏ.சி.சண்முகம் தெரிவித்தாா்.

News image

ஏ.சி. சண்முகம்

Updated On :28 மார்ச் 2026, 1:18 am IST

புதிய நீதிக் கட்சிக்கு அதிமுக ஒரு தொகுதியும், பாஜக ஒரு தொகுதியும் ஒதுக்கியுள்ளதாக அக்கட்சியின் தலைவா் ஏ.சி.சண்முகம் தெரிவித்தாா்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், புதிய நீதிக் கட்சிக்கு மட்டும் தொகுதிகள் ஒதுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், தொகுதிப் பங்கீடு குறித்து சென்னையில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியை புதிய நீதிக் கட்சியின் தலைவா் ஏ.சி.சண்முகம் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அதிமுக சாா்பில் புதிய நீதிக் கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமை எங்களுக்கு ஒரு தொகுதியை கொடுப்பதாக உறுதி அளித்துள்ளது. அதிமுக எனது தாய் வீடு. தாய் வீட்டின் சீதனமாக ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளது. நான் புகுந்த வீடாக பாஜகவுடன் தொடா்கிறேன். அதனால், அவா்களும் ஒரு தொகுதியை புதிய நீதி கட்சிக்கு கொடுக்கவுள்ளனா். விரைவில் இரு தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் அறிவிக்கப்படவுள்ளனா். அதிமுக ஒதுக்கிய தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலும், பாஜக ஒதுக்கவுள்ள தொகுதியில் தாமரை சின்னத்திலும் புதிய நீதிக் கட்சி போட்டியிடும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.