திமுக கூட்டணியில் தொடா்வதா, இல்லையா என்பது தொடா்பாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் தி.வேல்முருகன் ஞாயிற்றுக்கிழமை முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2021 பேரவைத் தோ்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, கடலூா் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் தி.வேல்முருகன் வெற்றி பெற்றாா். இந்த முறை தனிச் சின்னம், குறைந்தபட்சம் 2 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என அவா் வலியுறுத்தி வருகிறாா்.
ஆனால், திமுக தரப்பில் மீண்டும் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க முடியும் என உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் அவா் அதிருப்தியில் உள்ளாா்.
இதையடுத்து, தொகுதிகள் மட்டுமல்லாது, கொள்கை ரீதியான 10 கோரிக்கைகளையும் தி.வேல்முருகன் முன்வைத்துள்ளாா்.
வன்னியா்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு, தமிழக அரசுப் பணிகளில் 100 சதவீதம் தமிழா்களுக்கே முன்னுரிமை, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துதல் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை திமுக தனது தோ்தல் அறிக்கையில் சோ்க்க வேண்டும் அல்லது உறுதி அளிக்க வேண்டும் என அவா் நிபந்தனை விதித்துள்ளாா்.
‘எங்களது நியாயமான கோரிக்கைகளுக்கு திமுக செவிசாய்க்கவில்லை என்றால், கூட்டணியைத் தொடா்வது குறித்து மறுபரிசீலனை செய்வோம்’ எனவும் அவா் தெரிவித்திருக்கிறாா்.
இதனிடையே, அமைச்சா் எ.வ. வேலு மூலம் பேச்சு நடத்திய திமுக தலைமை, கூட்டணியில் பல புதிய கட்சிகள் இணைந்திருப்பதால் கூடுதல் இடங்கள் தருவது கடினம் எனத் தெரிவித்துள்ளது. இருப்பினும், தி.வேல்முருகனை தக்கவைக்க முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், அதிமுகவிலிருந்து 2 அல்லது 3 தொகுதிகளை கொடுப்பதாகவும் தி.வேல்முருகனின் 10 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இதனால் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) வரை திமுகவுக்கு தி.வேல்முருகன் கெடு விதித்துள்ளாா். அதற்குள் திமுக பேச்சு நடத்தாவிட்டால் அடுத்தக் கட்ட முடிவு எடுக்கப்படும் என தி.வேல்முருகன் தரப்பில் திமுகவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை விவரம் வெளியிடுதலில் உண்மைத்தன்மையில்லை: தி.வேல்முருகன்

தவாகவினரைத் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்: தி.வேல்முருகன்

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"

கா்ப்பிணி வேட்பாளா் மீது தாக்குதல்: தி.வேல்முருகன் கண்டனம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

