கரூர் பலி தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிபிஐ அலுவலகத்தில் மார்ச் 17-ல் ஆஜராகிறார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ஆம் தேதி தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக, முன்னதாக, தவெக தலைவர் விஜய் தவெக பொதுச் செயலர் என். ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலர் ஆதவ் அா்ஜுனா, இணைப் பொதுச்செயலர் சி.டி.ஆர். நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலர் மதியழகன் ஆகியோர் தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகினர்.
இதனிடையே, கரூர் பலி தொடர்பான விசாரணைக்கு தவெக தலைவர் விஜய் இன்று ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அவரால் ஆஜராக இயலவில்லை என்றும், 10 நாள்களுக்குப் பிறகு வேறொரு தேதியில் தில்லிக்கு பதிலாக சென்னையில் ஆஜராக புதிதாக அழைப்பாணை அனுப்பினால் ஆஜராகி வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க விரும்புவதாகவும் விஜய் சார்பில் சிபிஐக்கு திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இதைப் பரிசீலித்து, அவர் செவ்வாய்க்கிழமை ஆஜராகாமல் இருக்க சிபிஐ விலக்கு அளித்தது.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அவர் மார்ச் 17-ல் ஆஜராகிறார்.
இது தொடர்பாக செந்தில் பாஜாஜி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்கு பின் முரணாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன..
வருகின்ற மார்ச் 17 அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
Former Minister Senthil Balaji will appear at the CBI office on March 17 in connection with the Karur murder case.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மு.க. ஸ்டாலின்தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார்: செந்தில் பாலாஜி

என்ன, கரூர் சென்று செந்தில் பாலாஜி வாக்களிக்கவில்லையா? ஏன்??

கரூர் பலி: செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் விசாரணை!

கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் செந்தில் பாலாஜி!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை


