லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருச்சி-பெங்களூரு சிறப்பு ரயில் கால நீட்டிப்பு

திருச்சி-பெங்களூரு இடையிலான வாராந்திர சிறப்பு விரைவு ரயில் வரும் ஜூலையில் 3 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 Railway Announces

ரயில் - கோப்புப் படம்

Published On :1 ஜூலை 2026, 3:46 am IST

திருச்சி-பெங்களூரு இடையிலான வாராந்திர சிறப்பு விரைவு ரயில் வரும் ஜூலையில் 3 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ரயில் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. அதன்படி வரும் ஜூலை 14, 21, 28 ஆகிய தேதிகளில் காலை 6.15 மணிக்கு திருச்சி இருந்து புறப்படும் சிறப்பு ரயில்கள் (எண்: 06007) பெங்களூரு நிலையத்தை பிற்பகல் 1.45 மணிக்குச் சென்றடையும். மறுமாா்க்கத்தில் வரும் ஜூலை 14, 21, 28ஆகிய தேதிகளில் பெங்களூரில் இருந்து மாலை 3 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில்கள் (எண்: 06008) இரவு 10.30 மணிக்கு திருச்சி நிலையத்தை வந்தடையும். சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.