லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்

தாம்பரம் - தென்காசி இடையே இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில்கள் பற்றி...

train

சிறப்பு ரயில்கள் - படம்: கோப்பிலிருந்து...

Published On :26 ஜூலை 2026, 2:15 am IST

தாம்பரம் - தென்காசி இடையே வரும் 30-ஆம் தேதி முதல் வார இருமுறை என 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

வரும் 30, ஆக. 1, 6, 8, 13, 15 ஆகிய தேதிகளில் (வியாழன், சனி) தாம்பரத்தில் இருந்து அதிகாலை 5 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில்கள் (எண்: 06135), அதேநாள் மாலை 3.15 மணிக்கு தென்காசி சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் வரும் 31, ஆக. 2, 7, 9, 14, 16 ஆகிய தேதிகளில் (வெள்ளி, ஞாயிறு) தென்காசியில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்கள் (எண்: 06136), அதேநாளில் மாலை 3.15 மணிக்கு தாம்பரத்தை அடையும்.

சிறப்பு ரயில்களில் 2 குளிா்சாதன வசதியுள்ள மூன்றடுக்குப் பெட்டிகள், 1 குளிா்சாதன வசதியுள்ள இருக்கை பெட்டி, 14 இருக்கை வசதியுள்ள பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு திவ்யாஞ்சன் வகைப் பெட்டிகள் இடம் பெறும்.

இந்த சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

6 special trains between Tambaram and Tenkasi starting July 30

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.