கத்தார் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானவர்களில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
கத்தாரின் முக்கிய இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையமான ராஸ் லஃப்பான் தொழிற்பேட்டையில் உள்ள பர்சான் எரிவாயு விநியோக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நேரிட்ட வெடிவிபத்தில் சிக்கி இந்தியர்கள் உள்பட 13 பேர் பலியாகினர். 66 பேர் காயமடைந்தனர்.
ஈரான் போரின்போது கடந்த மார்ச்சில் இந்த எரிவாயு ஆலை ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகி, சேதமடைந்தது. இதையடுத்து, இந்த ஆலையின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதி திரும்பி வரும் சூழலில், ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் தணிந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, எரிவாயு ஆலையை மீண்டும் இயக்குவதற்கான பணிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்டன. அப்போது எதிா்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தால் ஆலை முழுவதும் தீப்பற்றியது.
இதில் உயிரிழந்த 13 பேரும் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலாளா்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த 66 பேரில் இந்தியா, கத்தார், பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், கென்யா, நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அடங்குவர்.
இந்த நிலையில், கத்தார் இயற்கை எரிவாயு ஆலை விபத்தில் பலியான 13 பேரில் 12 பேர் இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் எனவும் அதில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நெல்லை ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த பவித், பணகுடியைச் சேர்ந்த சுஜித்குமார், கவின் ஆகியோர் உயிரிழந்ததாகத் தகவல் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் பலியான தொழிலாளர்களின் இறப்புக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Summary
Three of the people who died in the explosion at the Qatar gas plant were from Tamil Nadu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கத்தாரில் எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் வெடி விபத்து: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை

கத்தார் பரிசளித்த விமானம், வானில் பறக்கும் வெள்ளை மாளிகை! டிரம்ப் புகழாரம்!

அமெரிக்காவுக்குப் பதிலடியாக பஹ்ரைன், ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்! கத்தார் கண்டனம்!

வளைகுடா நாடுகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்: வலுக்கும் கண்டனம்!
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |
தினமணி செய்திச் சேவை

மேகதாது தீர்மான திருத்தத்தை ஏற்கவில்லை! வெளிநடப்புக்கு பின் EPS பேட்டி | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு


