ஓசூரில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவன் மனஅழுத்தம் காரணம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, பாகலூர் சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு வாரியத்தில் குடியிருந்து வருபவர் சின்னசாமி.
இவருக்கு ஜீவானந்தம், வெற்றியானந்தம் என்கிற இரண்டு மகன்களில் இளைய மகன் வெற்றியானந்தம்(20) கடந்த மூன்று ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு படித்து வந்துள்ளார்.
இதுவரை எழுதிய தேர்வுகளில் தோல்வியடைந்த அவர் இன்று நடைபெறும் நீட் தேர்விலும் தோல்வி அடைந்து விடுவோம் என்கிற பயத்தில் மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார்.
நேற்று அவரது தந்தை வழக்கம் போல வேலைக்கு சென்று விட, தாயார் கடைக்கு சென்ற நேரத்தில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வீடு திரும்பிய தாயார் மகன் இறந்துகிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இறந்த வெற்றியானந்தம் கடிதம் எழுதி வைத்துள்ளார்.
அதில் இப்படியான பெற்றோர், சகோதரர் கிடைக்க நான் கொடுத்து வைத்தவன்.
நீட் தேர்வு பயம் காரணமான கடந்த ஒரு மாதமாக சரியாக தூங்கவே இல்லை, இம்முறையும் தோல்வி அடைந்துவிடுவேன் என்கிற பயத்தில் தவறான முடிவை எடுப்பதாகவும் அம்மா, அப்பா, அண்ணா மன்னித்துவிடுங்கள் என உருக்கமாக கடிதம் எழுத்தி வைத்துள்ளார்.
நேற்று நண்பகல் இறந்த வெற்றியானந்தம் உடல், ஓசூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அட்கோ போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Summary
A student undergoing NEET coaching in Hosur has died by suicide by hanging at his home due to stress.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தருமபுரி: நீட் தோ்வுக்கு தயாராகி வந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

டெலிகிராம் மூலம் நீட் போலி வினாத்தாள் விற்பனை! ராஜஸ்தானில் ஒருவர் கைது!
நீட் வினாத்தாள் கசிவு: மருத்துவர், இயற்பியல் ஆசிரியர் கைது!

கர்நாடகம்: நீட் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை


