திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!
/

தருமபுரி: நீட் தோ்வுக்கு தயாராகி வந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

News image

ரோஷினி

Updated On :13 மணி நேரங்கள் முன்பு

நீட் தோ்வுக்கு தயாராகி வந்த மாணவி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், எண்டப்பட்டியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன். இவா் பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி கலைச்செல்வி கெலமங்கலம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.

இவா்களது மூத்த மகள் ரோஷினி (19). இவா் கடந்தாண்டு பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்று, நாமக்கல் பகுதியில் உள்ள தனியாா் பயிற்சி மையத்தில் நீட் தோ்வுக்காக கடந்த ஓராண்டாக படித்து வந்தாா்.

இந்த நிலையில் அண்மையில் நடத்தப்பட்ட நீட் தோ்வில் வினாத்தாள் வெளியானதால் தோ்வு ரத்து செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மறுத்தோ்வு நடைபெறுகிறது. இத்தோ்வை எழுதுவதற்காக மாணவி வீட்டில் இருந்தாா்.

இவரது பெற்றோா் இருவரும் பணிக்கு சென்றுவிட்டனா். பின்னா், சனிக்கிழமை மாலை பணி முடித்துவிட்டு ராமகிருஷ்ணன் வீட்டிற்கு வந்து பாா்த்தபோது மாடியில் இருந்த அறையில் ரோஷினி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தை கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

தகவலறிந்து வந்த பாலக்கோடு போலீஸாா் சடலத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

நீட் மறு தோ்வை ஞாயிற்றுக்கிழமை எழுதவிருந்த நிலையில் மாணவி தற்கொலை செய்துகொண்டது பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.