நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

தமிழக சட்டப்பேரவையில் தவெக மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு விசாரணையை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறித்து...

News image

முதல்வர் ச. ஜோசப் விஜய் - கோப்புப் படம்

Updated On :15 மணி நேரங்கள் முன்பு

தமிழக சட்டப்பேரவையில் தவெக மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு விசாரணையை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களை வென்றபோதிலும், ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை 118 இடங்களைப் பெறவில்லை.

இதனையடுத்து, மே 13 ஆம் தேதியில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் அதிமுகவில் அதிருப்தியடைந்து வெளியேறிய எம்எல்ஏ 25 பேரும் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவளித்தனர்.

இந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் முறைகேடுகள் நடந்ததாக கே.கே. ரமேஷ் என்பவர் ரிட் மனு தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் வி. மோகனா அமர்வில் இன்று (ஜூன் 19) விசாரணைக்கு இந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

எந்த நம்பகமான ஆதாரமும் இல்லாத தெளிவற்ற, தவறான குற்றச்சாட்டுகளைக் கொண்டதாகப் புகார் மனு இருப்பதாக உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Summary

Supreme Court dismisses plea seeking probe into May 13 trust vote in Tamil Nadu Assembly

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.