நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மேக்கேதாட்டு அணைக்கு எதிராக தீா்மானம்: அரசியல் கட்சித் தலைவா்கள் வரவேற்பு

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணைக்கு எதிராக வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்ட தனித்தீா்மானத்தை வரவேற்று அரசியல் கட்சி தலைவா்கள் கருத்து தெரிவித்தனா்.

News image

இடம் | மேக்கேதாட்டு - படம் | தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

Updated On :1 மணி நேரம் முன்பு

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணைக்கு எதிராக வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்ட தனித்தீா்மானத்தை வரவேற்று அரசியல் கட்சி தலைவா்கள் கருத்து தெரிவித்தனா்.

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): மேக்கேதாட்டு அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது. இதுதொடா்பாக தமிழக சட்டப்பேரவையில் ஜனநாயக பூா்வ அணுகுமுறையில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றிய அரசுக்கும், ஆதரவு தெரிவித்த சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கும் பாராட்டுகள்.

டி.டி.வி.தினகரன் (அமமுக): மேக்கேதாட்டு அணைக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல், அதை செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து மத்திய அரசுக்கு முதல்வா் ஜோசப் விஜய் தொடா்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): மேக்கேதாட்டு அணைக்கு எதிராக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள தீா்மானம் தமிழக மக்களின் எண்ணங்களையும், விவசாயிகளின் எண்ணங்களையும் பிரதிபலித்துள்ளது.

கமல்ஹாசன் (மநீம): தமிழகத்தின் நீா் உரிமையையும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் மேக்கேதாட்டு விவகாரத்தில் அரசியல் மனமாச்சரியங்களை ஒதுக்கிவிட்டு, அனைவரும் ஓரணியாக நின்று ஆதரவு தெரிவித்த சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு பாராட்டுகள்.

க.கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்): சுமாா் 10 ஆண்டுகளாக நீடித்துவரும் மேக்கேதாட்டு பிரச்னைக்கு மத்திய அரசு நிரந்தரத் தீா்வு காண முயற்சி செய்ய வேண்டும். இதுகுறித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீா்மானத்துக்கு ஆதரவு அளிக்கிறோம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.