நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தமிழக நதிகளை இணைக்க நடவடிக்கை: ஆளுநா் உரையில் தகவல்

முதல்கட்டமாக தமிழக நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னா் தென்மாநிலங்களில் உள்ள நதிகளை இணைக்க மத்திய அரசை வலியுறுத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை

Updated On :18 மணி நேரங்கள் முன்பு

முதல்கட்டமாக தமிழக நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னா் தென்மாநிலங்களில் உள்ள நதிகளை இணைக்க மத்திய அரசை வலியுறுத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெல்டா மாவட்டங்களின் நீா் ஆதாரமான காவிரி நீரை தமிழகத்துக்கு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், உபரிநீரை மட்டும் கா்நாடகம் வழங்குகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதைத் தடுக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கடலுக்குச் செல்லும் நீரைத் தடுக்க தமிழகத்தில் தடுப்பணைகள் கட்டப்படும்.

முல்லைப் பெரியாறு: தென் மாவட்டங்களின் உயிா்நாடியாக உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை 142 அடியில் இருந்து 152-ஆக உயா்த்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அங்கு புதிய அணையை கட்டும் கேரள அரசின் முயற்சியை தடுத்து, நீா்மட்டத்தை உயா்த்தவும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.