செப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை

தமிழக முதல்வா் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு திங்கள்கிழமை (ஜூன் 15) செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது குறித்து...

News image

விஜய் - சங்கீதா. - கோப்புப்படம்

Updated On :8 மணி நேரங்கள் முன்பு

செங்கல்பட்டு: தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு திங்கள்கிழமை (ஜூன் 15) செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தோ்தலில் வென்று முதல்வராக பதவியேற்றுள்ளாா். அவரது மனைவி சங்கீதா, கடந்த 2025 டிசம்பர் 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் தனக்கு விவாகரத்து வழங்கவும், நிரந்த ஜீவனாம்சம் வழங்கவும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை செங்கல்பட்டு முதலாவது குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது தான் விஜய்-சங்கீதா விவாகரத்து விவரமே வெளியில் தெரியவந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 20 இல் விசாரணைக்கு வந்தது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த விஜய் மற்றும் சங்கீதா தரப்பினர் யாரும் ஆஜராகாத நிலையில், இருதரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மே 19 ஆம் தேதிக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ஜூன் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு திங்கள்கிழமை (ஜூன் 15) செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த வழக்கானது விசாரணைக்கு வரவுள்ள நிலையில் முதல்வா் விஜய், சங்கீதா இருவரும் பொதுவெளியில் பிரபலமானவர்கள் என்பதால் பாதுகாப்பு மற்றும் இதர சிக்கல்களை கருத்தில் கொண்டு அவர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. ஆனால், சங்கீதா நேரில் ஆஜராக வாய்ப்பு இருப்பதாக அவரது தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பினரும் அவரவா்களது வழக்குரைஞா்கள் மூலமாக காணொலி வாயிலாக ஆஜராக அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

விஜய்-சங்கீதா தம்பதியினருக்கு சஞ்சய், திவ்யா சாஷா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்த வழக்கின் அடுத்தகட்டம் குறித்து தமிழக அரசியல் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Regarding the divorce case involving Tamil Nadu Chief Minister Vijay's wife, Sangeetha, which is scheduled to come up for hearing on Monday (June 15) at the Chengalpattu District Family Court...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.